Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com
Flash News »
நாஞ்சில் வெள்ளாளர் [அல்லது] நாஞ்சில் வேளாளர் எது சரி ? => விளக்கம் => News & Events=> Community News - ல் காண்க.
தேரூர் சிவன்பிள்ளைBack to List
எஸ்.சிவன் பிள்ளை

கவிமணி பிறந்த தேரூரில் டிச., 21, 1910ல் பிறந்தவர்

காந்திஜியின் தண்டியாத்திரையால், கல்லூரியில் படிக்கும் போதே உத்வேக முற்று, கல்லூரியில் கொடி ஏற்றியவர்.

1933ல் சட்டப் படிப்பு முடித்து நாகர்கோவிலில் வழக்கறிஞரானார். பின்னர் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார்.

டாக்டர் எம்.இ.நாயுடு உடன் 1930-40 வரை சேர்ந்து நாஞ்சில் நாட்டில் அரிஜன சேவைகளில் தீவிரமாக உழைத்தார்.

1938, 1939 ஆண்டுகளில் கைதியாக 14 மாதங்களுக்கு மேல் சிறை வாழ்க்கை.

1942 போராட்டத்தில் ஏழு மாத சிறை அனுபவித்தார்.

இவர் மீது ஜன., 6, 1947ல் சுசீந்தரம் தேரில் கொடி ஏற்றியதற்காக கிரிமினல் வழக்கு போடப்பட்டது.

குடும்பத்துடன் 1946ல் சென்னையில் காந்திஜியைச் சந்தித்தார் சிவன் பிள்ளை. இதன் எதிரொலியாக வக்கீல் தொழிலை விட்டு விட்டுத் தேரூரில் கஸ்தூரிபாய் ஆதாரப்பள்ளியைத் தொடங்கினார்; இன்று அது நடுநிலைப்பள்ளி.

1950 முதல் 1952 வரை இரண்டாண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராயிருந்தார்.