
திரு .தெ.வே. பகவதிப்பெருமாள்Back to List


பெயர்: தெ.வே. பகவதிப்பெருமாள்
பிறந்த இடம்: கடுக்கரை
பிறந்த நாள்: 10-06-1937
தாயார்: க. முத்தம்மாள்
தந்தையார்: P.வேலுப்பிள்ளை
வாழும் இடம்: தெரிசனம்கோப்பு
திருமணம்: 11-12-1967
மனைவி : திருமதி. பாக்கியம் (சுசீந்திரம்)
மகன்: B. வேலுப்பிள்ளை
கணணிப்பொறியாளர்
மருமகள் : K.V. கவிதா
பேத்தி : K.V. சானியா
பேரன் : K.V. பாரத்
பாரதிய வெள்ளார் ஐக்கிய சங்கத்தின் மாநிலப் பொறுப்புக்குழு உறுப்பினரான இவர் 1947 ல் தெரிசனங்கோப்பில் நடைபெற்ற சுதந்திரதின விழா நிகழ்வில் தனது 11 வயதில் கலந்துகொண்டு தனது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தியவர்
1950 சிறுவர்களுக்கென்று சிறுவர் மன்றம் அமைத்து சமூகப்பணி தொடங்கியவர்.
1952 ல் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் பேரியக்கத்திற்காக தேர்தல்பணியில் திரு மகாதேவன்பிள்ளை மற்றும் கோ. முத்துகருப்பன் ஆகியோருடன் இணைந்து பணிசெய்தவர்.
1954 ஆகஸ்டு 11 ம் தேதி நடந்த திருத்தமிழக விடுதலை தினமாக கொண்டாடப்பட்டபோது இவர் புதப்பாண்டி அரசுப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார் அப்போது மாணவர்களை ஒன்று திரட்டி அரசாங்கத்தின் தடையை மீறி ஊர்வலமாக சென்று திட்டுவிளை ஆசாத் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டபோது புதை சோ. அண்ணாமலை கடுக்கரை தம்புரான் தோழப்பிள்ளை ஆகியவர்களுடன் கைது செய்யப்பட்டு புதப்பாண்டி சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் பள்ளிப்படிப்பு தடையாகி படிப்பு என்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
1981 1982 ஆகிய ஆண்டுகளில் அரசின் சார்பில் நடைபெற்ற சமூக நலத்திட்டங்களுக்கு அடிகோலியாக இருந்து செயல்பட்டார். 1982 ல் தமிழக எல்லை இணைப்பு வெள்ளிவிழாவில் தமிழக அரசால் எல்லைப்போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்பட்ட கேடயத்தை ஜீவா போக்குவரத்துக்கழக பெயர்மாற்றத்தை கண்டித்து திருப்பி அனுப்பியவர்.
தமிழக அரசு கன்னியாகுமரிமாவட்டத்தில் இயங்கி வந்த அரசுப்போக்குவரத்துக்கழகத்திற்கு பொதுவுடமை வீரர் ஜீவா பெயர் வைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்.
1986 ல் இருந்து 1991 வரையிலும் தெரிசனங்கோப்பு ஊராட்சியின் தலைவராக தேர்வுசெய்யப்பட்டு 5 ஆண்டுகாலம் அரிய பல நலத்திட்டப்பணிகளை மேற்கொண்டார். 1992 ல் மகாத்மாகாந்தி மிஷன் ஸ்தாணுலெட்சுமி முதியோர் இல்லம் ஆகியவற்றின் பொதுச்செயலராக சேவைபுரிந்தார்.
2006 ல் சென்னையில் நடைபெற்ற தமிழ்மாநில பொன்விழாவில் எல்லைப்போராட்ட தியாகிகளை அழைத்து தமிழக அரசு கௌரவப்டுத்தி விருதுகளை வழங்கியது. அதில் கலந்து கொண்டு அன்றைய முதலமைச்சர் அவர்களால் விருது வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டார். தற்போது தமிழ்நாடு தெற்கெல்லை இணைப்புப் போராட்ட தியாகிகள் சங்க பொதுச்செயலராக தொண்டாற்றுகிறார்.
தற்போது பாரதிய வெள்ளாளர் ஐக்கிய சங்கத்தின் மாநிலப்பொறுப்புக்குழு உறுப்பினராக நமது சமுதாயத்தவர்களின் நலன் ஒன்றையே கருத்தாகக் கொண்டு அதற்காக 2006 முதல் பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு தீவிரமாக செயல்பட்டுவரும் 72 வயதான ஒரு சுறுசுறுப்பான மனிதத்தேனியாக வாழும் தியாகி விருது பெற்ற இளைஞர் நாமும் இவரை நமது வாழ்வின் முன்னுதாரனமாக கொள்ளலாமே!
- IAS Academy உணவு வகைகள் அவசர உதவி குழு Free ADS Donate Blood மக்கள் இயக்கம் நம்மவர்கள் எழுதிய புத்தகங்கள் சமுதாய நடுவர் தீர்ப்பாயம் நாஞ்சில் மலர்
- About Us About Founder Text Message Video Message Announcements Community-News
- ஆலோசனை ஏன் கல்வி ஆலோசனை சட்ட ஆலோசனை மருத்துவ ஆலோசனை திருமண ஆலோசனை வேலை வாய்ப்பு ஆலோசனை கலாசார வழிமுறை ஆலோசனை அரசு வரி ஆலோசனை
- View Resume Submit Resume Photo Gallery Video Gallery
- போற்ற வேண்டிய பெரியோர்கள் ஒளிரும் வைரங்கள் சேவை செம்மல்கள் இன உணர்வூட்டும் எழுச்சிகள் சமுதாய கோயில்கள்
All Rights Reserved. © Copyright 2020 NanjilVellalar.com
Powered by :Brilliant ID Systems